திருந்திய 219 சாராய வியாபாரிகளுக்கு ரூ.65 லட்சம் நிதி! வேலூர் எஸ்.பி.பேட்டி!

திருந்திய 219 சாராய வியாபாரிகளுக்கு ரூ.65 லட்சம் நிதி! வேலூர் எஸ்.பி.பேட்டி!

  ஜி.கே.சேகரன்,

  கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலை விட்டுவிட்டு மனம் திருந்தி 219 பேர் வந்துள்ளனர் இவர்களுக்கு ரூ,.65 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம்  குறினார்.

  மேலும் அவர் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் முழுமையாக கள்ளச்சாராயம் ஒடுக்கப்பட்டுள்ளது.

  இதுவரையில் 15 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் தொடர்ந்து இம்மாவட்டத்தில் கள்ளச்சாராயம் இல்லாத நிலையை உருவாக்க 14 புதிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு 40 லட்சம் மதிப்பிலான கள்ளச்சாராயங்கள் ஒன்றரை மாதத்தில் பறிமுதல் செய்துள்ளோம்.

  இதே போன்று வெளிமாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படும் மதுபாட்டில்கள் 3110 பறிமுதல் செய்துள்ளோம் மாநில எல்லையில் சோதனை சாவடி 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வாகன தனிக்கையும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

   சாராயம் காய்ச்சுபவர்களுக்கு வெல்லம் சப்ளை செய்பவர்களை மட்டும் கைது செய்கிறோம். விவசாயிகளுக்கு எந்த பாதிப்பில்லை குறிப்பாக கள்ளச்சாராயம் குறித்து மலை பகுதி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம் கள்ளச்சாராயம் காய்ச்சி அந்த தொழிலை விட்டுவிட்டு மனம் திருந்தி 219 பேர் வந்துள்ளனர் இவர்களுக்கு ரூ,.65 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.