வேலூர் திமுக சார்பில் 2069 பேருக்கு பிரியாணி!

கு.அசோக்,
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநகர திமுக சார்பில் 2069 பேருக்கு பிரியாணி மற்றும் இனிப்புகளை வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்.
வேலூர் மாவட்டம்,வேலூரில் உள்ள திமுக மாநகர அலுவலகத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 2069 பேருக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா,மற்றும் துணை மேயர் சுனில், முன்னாள் எம்.பி. முகமது சகி, சத்துவாச்சாரி கவுன்சிலர் ஆர்.பி.ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு மக்களுக்கு கேக் வெட்டியும், உணவுகளை வழங்கியும் முதல்வரின் பிறந்த நாளை கொண்டாடினார்கள்.