வகுப்பெடுத்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்:-மனப்பாடம் செய்து தேர்வு எழுதக்கூடாது என அறிவுறை!

வகுப்பெடுத்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்:-மனப்பாடம் செய்து தேர்வு எழுதக்கூடாது என அறிவுறை!

  ம.பா.கெஜராஜ்,

  வேலூர் மாவட்டம், காட்பாடி, காந்திநகரில் அரசு கல்வியியல் கல்லூரி உள்ளது. இங்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் நேற்று திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது வளாகத்தில்  புதர்கள் மண்டிக்கிடப்பதைப் பார்த்த அவர் அதனை தூய்மை செய்து வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் அறைக்கு சென்றவர் ஆசி ரியர்களின் வருகை பதி வேட்டை ஆய்வு செய்தார். ஒவ்வொரு பேராசிரியரின் பெயரையும் வாசித்து அவர்கள் வருகை தந்துள்ளனரா என சரி பார்த்தார்.

சும்மா வாசியுங்களேன்:-மாணவர்களுக்கு பொது இடத்தில் தோப்புகரணமா? தீயணைப்பு அலுவலர்களை கண்டிக்கும் மனித உரிமை அமைப்புகள்!

 பின்னர் அவர் ஒரு வகுப்பறைக்கு சென்றார். அங்கு பேராசிரியர்களை மாணவர்களுக்கு பாடம் எடுக்க கூறி மாணவர்களுடன் அமர்ந்துக் கொண்டார்.

 அப்போது கல்லூரி முதல்வர் (பொறுப்பு) செல்வி உள்பட சில பேராசிரியர்கள் பாடம் நடத்தினர். முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளை பாடம் எடுக்க கூறினார். ஒரு மாணவனும், ஒரு மாணவி யும் பாடம் நடத்தினர்.

 அதன் பின்னர்ரா ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அப்போது அவர் நாம் பூமியை பற்றி முழுமை யாக தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு பூமியைப் பற்றி அதன் அடிப்படைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.அவர்களுக்கு தண்ணீரின் அவசியத்தை விளக்க வேண்டும். தண்ணீரை சேமிக்க வேண்டும், தூய்மையாகவைத்திருக்க வேண்டும். உணவு உற்பத்தியை பெருக்குவது குறித்து விளக்க வேண்டும்.

சும்மா வாசியுங்களேன்:-அரசியல் டாஸ்மாக் ஊழியர்களின் காலில் விழுந்து கெஞ்சிய எம் .எல். ஏ.!

 பூமிக்கு மேல் உள்ள அடுக் குகளையும், பூமிக்கு கீழ் உள்ள அடுக்குகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

  பொதுவான அறிவியல் விஷயங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் போது வரைபடம் போட்டு விளக்க வேண்டும். தேர்வில் மாணவர்கள் யோசித்து எழுத வேண்டும். மனப்பாடம் செய்து எழுதக்கூடாது.

 மாணவர் சமுதாயம் சிறந்த சமுதாயமாக உருவாக்கும் வகையில் பேராசிரியர்கள் பாடங்களை எடுக்கவேண்டும் என வகுப்பெடுத்தார். ஆட்சியரிடம் மாணவர்கள் வைத்த கோரிக்கைக்கு அவர் தெரிவிக்கையில், "கல்லூரியில் பேராசிரியர்கள் பற்றாக் குறை உள்ளதாக தெரிவித்தனர். அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாணவர்களுக்கான விடுதியும் அமைக்கப்படும் என்றார்.