சிறுதானிய வகைகள் குறித்து விவரித்த திருப்பத்தூர் ஆட்சியர்!

ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த புகைப்படம் டிஜிட்டல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்களும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.செ.வில்வநாதன் அவர்களும் துவக்கி வைத்தனர்.
மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையில் ஆம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஸ்ரீனிவாசா திருமண மண்டபத்தில் 28.07.2023 ஆம் தேதி வரை நடைபெறம் புகைப்பட டிஜிட்டல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்களும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.செ.வில்வநாதன் அவர்களும் துவக்கி வைத்து, கண்காட்சியினை பார்வையிட்டனர்.
இக்கண்காட்சியில் சர்வதேச சிறுதானியங்கள் 2023 ஆண்டை கொண்டாடும் வகையில் பல்வேறு சிறு தானிய வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து அரங்கங்கள் வாயிலாகவும், பதாகைகள் வாயிலாகவும், மற்றும் துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் இக்கண்காட்சிக்கு வரும் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து காட்சி படுத்தி எடுத்துரைத்தனர்.
முன்னதாக இந்நிகழ்வினில் மத்திய மக்கள் தொடர்பு கள விளம்பரம் பிரிவு திரு.முரளி இ.த.ப அவர்கள் வரவேற்பு நல்கி வரவேற்றார். தொடர்ந்து இயக்குனர் மத்திய மக்கள் தொடர்பு திரு.ஜெ.காமராஜ் இ.த.ப அவர்கள் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே எடுத்துரைத்தார். தொடர்ந்து ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.செ.வில்வநாதன் அவர்கள் இது போன்ற அரசின் திட்டங்களை நன்கு தெரிந்து கொண்டு பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்;. தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள்
பொதுமக்கள் நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என எடுத்துரைத்தார்.
உதாரணமாக மத்திய, மாநில அரசிகளின் மருத்துவ காப்பீடு திட்டங்கள் குறித்த பயன்பாடின் முக்கியத்துவத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் இது போன்ற மத்திய, மாநில அரசின் திட்டங்கள் அனைத்து சமூக மக்களும் பயன் அடையும் வகையில் அனைத்து அரசுத்துறைகளின் வாயிளாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் மாணவர்கள் அறிந்திடும் வகையில் மேற்படிப்பிற்காக கல்வி கட்டண செலவினங்களை வங்கி கடன் வயிலாக பெற்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார்போல் கல்வி மேற்படிப்பு படிப்பதற்கும், மேலும் சுயதொழில் தொடங்குவதற்கும் வங்கி கடன் வழங்கபட்டு வருகிறது.
இதுமட்டும் இன்றி வங்கிகள் சுயதொழில் மேற்கொள்வதற்கு பயிற்சிகள் வழங்கி மானியத்துடன் வங்கி கடன் வழங்கபட்டு வருகிறது என அரசின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்து, இன்றைய காலகட்டங்களில் சிறுதானிய உணவு வகைப்பாடு முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, பண்டைய கால நிலைப்பாட்டை நாம் பேணி காத்து ஆரோக்கியமாக வாழ சிறுதானிய உணவுகளை பயன்படுத்தி பயன் அடைவதுடன், சிறுதானியங்கள் பாதுகாத்து பேணிக்காத்தல் வேண்டும் என தெரிவித்தார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.