ஷூ கம்பெனியின் தில்லாலங்கடி!

ஷூ கம்பெனியின் தில்லாலங்கடி!

 கு.அசோக்,

 கே.எச். காலனி தொழிற்சாலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி நுழைவாயில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

 வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த பெருமுகையில் கே.எச். என்ற தனியார் ஷூ கம்பெனியில் சுமார் 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிரந்தர பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காமல் ரூ.7 ஆயிரம் தருவதாவும் தற்போது புதியதாக சேர்ந்துள்ளவருக்கு ரு 10.000 ஆயிரம் தருவதாகவும் பிரச்சனை இருந்து வந்தது.

 இந்நிலையில்  நிர்வாகத்தை கண்டித்து 3 ஆயிரம்  ஊழியர்கள்  உள்ளிருப்பில் ஈடுபட்டு நுழைவாயிலில் தர்ணா  போராட்டம் நடத்தினார்கள். ஊதிய உயர்வு அளிக்க கோரி தொழிலாளர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்  இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 வேலூரில் உள்ள பல ஷூ தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் அடிமைகளாகவே நடத்தப்பட்டு வருகின்றனர்.

 இது குறித்து தொழிலாளர் நல அலுவலர்களுக்கு தெரிந்தும் கூட அவர்கள் மனசாட்சியோடு பணியாற்றுவதில்லை.