ஆந்திரா கஞ்சா விற்பனையாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

ஜி.கே.சேகரன்,
ஆற்காடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவரை கலெக்டர் சிபாரிசு பேரில் குண்ட தடுப்பு சட்டத்தில் செய்து சிறையில் அடைத்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, கனகசபாபதி தெரு பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் பெயர் குமரேசன் வயது -30.
இவர் ஆற்காடு பகுதியில் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார்.இது தொடர்பாக இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு ஆகியோரின் மேற்பார்வையில் ஆற்காடு காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி அவர்கள் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டார்.
பின்னர் அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் காவல் கண்காணிப்பாளர்
தீபாசத்யன் கஞ்சா வழக்கில் தொடர்புடைய குமரேசன் என்ற வாலிபரை வேலூரில் உள்ள மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.மேலும் இவர் ஆந்திரா மாநிலத்தில் கஞ்சா விற்றதாக வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.