தண்ணிர் பிரச்சனை...அலுவலரை காய்ச்சி எடுத்த பொதுமக்கள்!

தண்ணிர் பிரச்சனை...அலுவலரை காய்ச்சி எடுத்த பொதுமக்கள்!

   ஜி.கே.சேகரன்,

கடந்த மூன்று மாதங்களாக முறையாக குடிநீர் விநாயகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் அலுவலரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 இராணிப்பேட்டைமாவட்டம், இராணிப்பேட்டை அடுத்த காரை மேட்டுத் தெரு இரண்டாவது வார்டு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

   இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

   மேலும் இச்சம்பவம் குறித்து இராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் குடிநீர் விநியோகிப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  இது தொடர்பாக புகார் தெரிவிக்க செல்லும் பொது மக்களை அலட்சியமாக நடத்துவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

  இந்த நிலையில் இதனைத்தொடர்ந்து இன்று இராணிப்பேட்டை தெங்கல் செல்லும் சாலையை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகராட்சி நிர்வாக அலுவலர்களையும் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவிக்கையில் தங்களது பகுதிக்கு உடனடியாக குடிநீர் எவ்வித தடையின்றி வழங்க வேண்டுமெனவும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் அவர்கள் ஆவேசப்பட்டனர்.