சுடுகாட்டையும் ஆட்டையை போட்ட மனிதர்!சாலைமறியல் பஸ் சிறைபிடிப்பு!!

சுடுகாட்டையும் ஆட்டையை போட்ட மனிதர்!சாலைமறியல் பஸ் சிறைபிடிப்பு!!

ஜி.கே.சேகரன், 

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன் பேட்டை, குட்டூர் பகுதியை  சேர்ந்த ஜெயக்குமார் ஹாலோ பிரிக்ஸ் கல் அறுக்கும் தொழிலில் செய்து வந்தார்.

 இவர் நேற்று வெங்களாபுரம் பகுதியில் வேலை செய்துவிட்டு அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது புத்துக்கோவில் அருகில் ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 அவரது உடல் இறுதி சடங்குகள் முடிக்கப்பட்டு அடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டு சென்ற போது அதற்கு இடமளிக்காமல் ஆக்கிரமிப்பாளர் தடுத்துள்ளார்.

 அந்த மயான இடத்தை மணிவண்ணன் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து அதில் விவசாயம் செய்வதற்காக வேலி அமைத்துள்ளார்.

 ஆகவே  சடலத்தை புதைக்க தடுத்து ரகளை செய்தார்.

 ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சடலத்தை சாலையில் வைத்து  அரசு பேருந்தை  மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் மற்றும் அம்பலூர் காவல்துறையினர் சாலையில் மறியலில் ஈடுபட்ட பெருமக்களிடம் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டனர்.

 பின்னர்,அதே இடத்தில் சட்டத்தை புதைக்க ஏற்பாடு செய்தும், மயான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதற்கு மனு அளிக்கும் படியும் அதன் பெயரில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு உடலை  நல்லடக்கம் செய்தனர் இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.