மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்!

கு.பிரணேஷ்,
ஆம்பூர் அருகே வனவிலங்கு மற்றும் பறவைகளை வேட்டையாட விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி வெடித்து பெண் காயமடைந்தார்.
மேற்படி துப்பாகியை பதுக்கியவர் அதை எடுக்கும்போது தவறுதலாக டிரக்கர் மீது கை பட்டதில், பெண்ணின் நெஞ்சு பகுதியில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு குப்புராஜப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன், இவரது மனைவி கஸ்தூரி விவசாய தொழில் செய்து வரும் சிலம்பரசன் வனவிலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடுவதற்காக நிலத்தில் கள்ளதனமாக இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.,
இந்நிலையில் நிலத்தில் இருந்த நாட்டு துப்பாக்கியை சிலம்பரசன் எடுக்க முயற்சி செய்தபோது சிலம்பரசனின் கை துப்பாக்கியின் லிவரில் பட்டதில் நாட்டுத் துப்பாக்கில் இருந்த குண்டு அருகாமையில் இருந்த சிலம்பரசனின் மனைவியின் நெஞ்சு பகுதியில் பாய்ந்துள்ளது.
இதில் சிலம்பரசனின் மனைவி கஸ்தூரி படுகாயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
சம்பவம் குறித்து தகவல் அறிந்த உமராபாத் காவல்துறையினர் நாட்டுத் துப்பாக்கியால் மனைவியை சுட்ட சிலம்பரசன் என்பவரை கைது செய்து அவரது நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மற்றும் வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
குறிப்பு:-உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மச்சம்பட்டு, பாலூர், அரங்கல் துருகம், சுட்ட குண்டா உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு துப்பாக்கிகளை விவசாய நிலங்களில் பதுக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாகியுள்ளது.