சிறுமியின் வாழ்க்கையை சிதைத்த தாத்தா மூன்று மகன்களை கைது செய்ய உத்தரவு!

சிறுமியின் வாழ்க்கையை சிதைத்த தாத்தா மூன்று மகன்களை கைது செய்ய உத்தரவு!

 கே.ஏ.ஜெகதீஷ்வரி,

  பதினாறு வயது சிறுமியின் வாழ்க்கையை சிதைத்த தாத்தாவையும் அவரது மூன்று மகன்களையும் கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

   தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரை சேர்ந்தவர் அர்ஜுன பாண்டி.   இவரது மகன்கள் கிருஷ்ன பாண்டி,  பாலகிருஷ்ணன்,  சூரியநாராயணன்.   இவர்கள் 3 பேரும் 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  

   இந்த வழக்கில் கைது ஆகாமல் இருப்பதற்காக மூன்று பேரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

  மேற்படி மனு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரோடு சேர்த்து ஐந்து முறை முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார். இதில் இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.   இரண்டு  வழக்குகள் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன.

  இந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  

   இதை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது என்று தெரிவித்தார்.,

  மேலும், மனுதாரர்கள் உறவினரின் 16 வயது குழந்தையின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள்.   திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் இதுவரை குற்றவாளிகளை கைது செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.   இந்த வழக்கில் இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை.  

   ஆகவே,  இந்த வழக்கில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து சிடி ஃபைலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

 மேலும் குற்றம் சாட்ட்டப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்து வழக்கின் இறுதி அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.