லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.பிடிபட்டார்!

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.பிடிபட்டார்!

 ஜி.கே.சேகரன்,

 நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையிட்டு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

 திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா பகுதியைச் சேர்ந்த  தமிழரசன் இவர் அவருடைய பட்டாவின் பெயர் மாற்றுவதற்காக கிராம நிர்வாக அலுவலரான முனியப்பனிடம் சென்றுள்ளார்.

 அப்போது பட்டாப்பெயர் மாற்றம் செய்ய முனியப்பன் மூவாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.

 இந்நிலையில் தமிழரசன் வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் கௌரி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு கையும் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதனை கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் வாங்கிய போது அவரை  பிடித்தனர்.