ஆரம்ப சுகாதார நிலையங்களின் 1800 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டுமாம்!

ஜி.கே.சேகரன்,
வேலூர்மாவட்டம்,வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு அனைத்து ஊழியர் நல சங்கம் சார்பில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு அனைத்து ஊழியர்கள் நலசங்கம் சார்பில் கவண ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற இதனை, மாவட்டத் தலைவர் மார்க் ராஜ் துவங்கி வைத்தார்.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் மோகனமூர்த்தி பொதுசுகாதார அலுவலர் சங்க மாவட்டத்தலைவர் சரவணராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கோரிக்கைகள்,
தேசிய எய்ட்ஸ் கட்டுபாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவிகித ஊதிய உயர்வை எய்ட்ஸ் கட்டுபாட்டு நிறுவனம் அறிவித்தது.
அதன்படி தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அரசு மருத்துவமனைகள் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள் இவைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் 10 சதவிகித ஊதிய உயர்வு நவம்பர் மாதம் அமுல்படுத்தப்பட்டது.
ஆனால் மாநிலம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 1800 ஊழியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு அளிக்கபடவில்லை.
எனவே ஒரே பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காததால் ஏமாற்றமடைந்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் பாரபட்சமின்றி ஊதிய உயர்வை தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரி இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.