விபத்தில் இறந்த மாணவி குடும்பத்துக்கு வைப்பு நிதி! ரூ.88 இலட்சம் மதிப்பில் பல நலதிட்டங்கள்! ஆட்சியர் வழங்கினார்!

விபத்தில் இறந்த மாணவி குடும்பத்துக்கு வைப்பு நிதி! ரூ.88 இலட்சம் மதிப்பில் பல நலதிட்டங்கள்! ஆட்சியர் வழங்கினார்!

  ஜி.கே.சேகரன்,

 வேலூர் மாவட்டத்தில் ரூ.88 இலட்சம் மதிப்பில் 87 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் 61 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  வே.இரா.சுப்புலெட்சுமி வழங்கினார்.

 வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 87 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் ரூ.83.52 இலட்சம் மதிப்பிலும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 61 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் ரூ.4.47 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.88 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள்  . நந்தகுமார்கார்த்திகேயன், வி. அமுலு விஜயன், மேயர் சுஜாதா ஆகியோர் முன்னிலை பெற்றனர்.

 விலையில்லா தையல் இயந்திரங்கள் வேலூர் மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தையற்கலை  பயின்ற மகளிர்களுக்கு  சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் தையல் இயந்திரங்கள் இலவசமாக  வழங்கப்பட்டு வருகிறது.

  அதன்படி முதற்கட்டமாக நேர்காணலில் தேர்வுசெய்யப்பட்ட 61 பயனாளிகளுக்கு இன்று  இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

   இதில் ரூ.8,456/- மதிப்பிலான நவீன உயர்ரக தையல் இயந்திரங்கள் 35 நபர்களுக்கும், ரூ.5,824/- மதிப்பிலான  மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் 26 நபர்களுக்கும் என மொத்தம் 61  பயனாளிகளுக்கு ரூ.4,47,384 மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

  மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர்          மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 87 பயனாளிகளுக்கு தலா ரூ.96,011/- மதிப்பில் என மொத்தம்  ரூ.83,52,957/- மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நிவாண தொகை மற்றும் வைப்புத்தெகை

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் பொய்கை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  பயின்று எதிர்ப்பாராத விபத்தினால் மரணமடைந்த சிறுமியின் தந்தை திரு.எஸ்.சாந்தகுமார் அவர்களிடம் நிவாரண தொகையாக ரூ.1 இலட்சத்திற்கான ஆணையையும், வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி திட்டத்தில் வளையல்காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சார்ந்த சிறுவர்கள் யுவஸ்ரீ மற்றும் பிரவீன்குமார் ஆகியோருக்கு தலா ரூ.75,000 வீதம் ரூ.1,50,000 க்கான வைப்புத்தொகை ஆணையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

  மின்னணு குடும்ப அட்டைகளபின்னா ¢உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்திற்கு வரப்பெற்றுள்ள 726 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.