உத்தமபாளையத்தில் கூலிப்படை?நடவடிக்கை கோரி புகார்!

மு.ராஜா,
உத்தமபாளையத்தில் கூலிப்படை இயங்கிவருவதாக ரெட் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அபுதாகிர் குற்றச்சாட்டு.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ஷேக் காதர் சாயபு என்பவருக்கும் சமூக ஆர்வலர் அபுதாகிருக்கும் இடம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது.
இந்நிலையில், கோட்டை மேட்டை சேர்ந்த கமருதீன் என்பவர் தன்னுடன் வைத்திருக்கும் கூலிப்படையோடு சேர்ந்து அபுதாகிருக்கு சொந்தமான காரை தீ வைத்து கொளுத்திவிட்டார்.
மேலும் அபுதாஹிரை ஊரை விட்டு ஓடி விடுங்கள் இல்லையென்றால் காரை கொளுத்தியது போல் உங்களையும், உன் குடும்பத்தையும் தீ வைத்துக் கொளுத்தி விடுவேன் என மிரட்டினாராம். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கை இல்லை.
ஆகவே ரவுடித்தனம் செய்து வரும் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த கமருதீன் என்பவரை உடனடியாக கைது செய்து உத்தமபாளையத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்க வேண்டும் என சமூக ஆர்வலர் அபுதாகிர் கேட்டுக்கொண்டுள்ளார்.