மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படிவங்களை பதிவேற்றம்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படிவங்களை பதிவேற்றம் செய்யும் இரண்டாம் கட்ட முகாம்கள் நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.த.மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், மகளிர் திட்ட இயக்குநர் திரு.யு.நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ அபிராமி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் நலம் - இனி நம் முதல் தேர்வு என்னும் பொருண்மையில் மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் கருத்துகளை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.த.மாலதி அவர்கள் திட்டத்தின் நோக்கத்தை விளக்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ந.இராமச்சந்திரன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் திரு.வெங்கட்ராமன், அபிராமி கலை கல்லூரி இயக்குநர் திரு.ஜோதி இராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.