நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை! திருப்பத்தூர் கலெக்டர் அறிவிப்பு!

ஆர்.ரமேஷ்,
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பிவ),மிகப்பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ / மாணவியருக்கு தமிழகஅரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கிவருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/மிபிவ/சீம மாணவ-மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
நடப்பாண்டில் புதியது மாணாக்கர்கள் https://ssp.tn.gov.in என்றஇணையதள முகவரியில் https://ssp.tn.gov.inஇல்சென்று ஆதார் எண் அளித்து E-KYC Verification செய்ய வேண்டும்.
கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship Portal) புதியதிற்கு(Fresh) 01.02.2024 முதல் செயல்பட துவங்கும், புதியதிற்கான விண்ணப்பங்கள் மாணாக்கர்கள் 29.02.2024-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகி பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு:செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.