பெண் போலீசாரின் அடாவடி! மூதாட்டியை இழுத்துச் சென்ற பரிதாபம்!!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,

  ராமநாதபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை, பால்குளம் கிராம  நீரோடை ஒன்றில் கட்டிடம் கட்டுவதற்காக அரசு முயற்சி செய்தது, இதனை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்தனர். எங்களுக்கு நீர் ஆதாரமே அந்த ஓடை தான் அதிலேயும் நீங்கள் கட்டிடம் கட்டி விட்டால் எங்களுக்கு எப்படி தண்ணீர் வரும் என்று கொதித்து எழுந்த மக்கள் கட்டுமான பணிகளுக்கு எதிராக போர் கொடி தூக்கினார்.

 இந்நிலையில் தொடரப்பட்ட வழக்கில் அந்த இடத்தில் கட்டுமான பணிகளை செய்யலாம் என்று உத்தரவு கிடைக்கப்  பெற்றது.

    நீதிமன்ற உத்தரவு பேரில் கட்டுமான பணிகளை தொடர ஜேசிபி இயந்திரம் மற்றும் ஆண் பெண் போலிஸ் படையுடன் அங்கு வந்து பள்ளம் தோன்றிய அலுவலர்களை பெண்கள் மற்றும் கிராமத்தில் சூழ்ந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

   அப்போது ஜேசிபி இயந்திரத்தின் முன் உள்ள பக்கெட் அருகே தலையை வைத்து ஒரு வயதான பெண்மணி மறியல் நடத்தினார். இதனால் அந்த பகுதி பரபரப்படைந்தது.

   அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுதா என்ற பெண் போலீஸ் பள்ளத்திலிருந்து அந்த மூதாட்டியை தரதரவென்று இழுத்தா£.¢ அவருக்கு துணையாக எஸ்.எஸ்.ஐ கலா என்பவரும் வந்து அந்த பாட்டியை பிடித்து இழுத்தனர் 

  மாராப்பு சேலையை பிடித்து இழுத்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு வயதானவரை பெண் போலீசார்  இப்படியா தாக்கி இழுப்பது என்று கண்டனங்கள் வலுக்கிறது.