தெருநாய்களை ஒழிக்க தீர்மானம்!

பா.சுரேஷ்.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மண்ணிவாக்கம் ஊராட்சியில் 30 பேர் கொண்ட யூனிசெப் தொண்டு நிறுவனம் ஆய்வு.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள மண்ணிவாக்கம் ஊராட்சியில் மக்கும் குப்பைகள், கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளில் இருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இதனை 30 பேர் கொண்ட யுனிசெப் குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருந்த பெண் ஊழியர்களிடம் எப்படி உரம் தயாரிக்கப்படு கிறது அதனை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து யுனிசெப் குழுவினர் கேட்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு வடிகால் பில்டர் மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிவறைகள், சுத்திகரிப்பு குடிநீர் நிலையம், சுகாதார பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவன்,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுமதி லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம், ஊராட்சி செயலர் ராமபக்தன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இதேபோன்று நெடுங்குன்றம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீனிவாசன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் பிரதான கோரிக்கையாக கடந்த 2 மாதத்திற்கு மேலாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சம்பளம் வராதது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
ஊனைமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஜி.மகேந்திரன் தலைமையில் துணை தலைவர் தனசேகர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றன. அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதி பெறாமல் மண் அள்ளுவது, தெருநாய்களால் பொதுமக்கள் அச்சுறுத்தல், பொதுநிலத்தில் குப்பை கிடங்கு அமைப்பது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.
அதுபோன்று கீரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வசுந்தரி ராஜேந்திரன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மழைக்காலம் தொடங்கியதால் கால்வாய்கள் துர்வாருதல் மற்றும் 100நாள் வேலை திட்டத்தில் 2 மாதங்களுக்கு மேலாக சம்பளம் பாக்கி போன்ற கொள்கிறீர்கள் முன்வைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வேங்கடமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி ரவி தலைமையில் துணை தலைவர் எஸ்.சந்திரன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றன. முக்கிய கோரிக்கையாக 100 நாள் வேலை திட்டத்தில் 8 வாரத்திற்கு மேலாக சம்பளம் வரவில்லை என புகார் அளிக்கப்பட்டன. உடன் வார்டு செயலாளர்கள், ஊராட்சி செயலர் மற்றும் பொதுமக்களென ஏராளமானோர் உடனிருந்தனர்.