ஒப்பந்ததாரர் ஓடிவிட்டார்:- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஒப்பந்ததாரர் ஓடிவிட்டார்:- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

 ஜி.கே.சேகரன்,

  வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு நடத்தினர். அப்போது இங்கு பணிகள் சரிவர செய்யவில்லை ஒப்பந்ததாரர் ஓடிவிட்டதாகவும் குற்றச்சாட்டு -  தென் பென்னை பாலாறு இணைப்பு திட்டம் ஆமாம் ஆய்வில் தான் உள்ளது நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அது எவ்வளவு என தெரியவில்லை அமைச்சர் துரைமுருகன் பேட்டி

 வேலூர்மாவட்டம், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளான மேல்நிலை நீர் தேக்க தொட்டி, சாலை பணிகள், பாதாள சாக்கடை பணிகள் போன்றவற்றை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் கல்புதூர், காட்பாடி, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

 இதில் கல்புதூர் ராஜூவ் காந்தி நகரில் கட்டப்பட்ட அம்ருத் நீர் பணிகள் கட்டி முடிக்கப்பட்டு ஒப்பந்ததாரர் ஓடிவிட்டார் ஆனால் அங்காங்கே தண்ணீர் உடைந்து வீணாகிறது என அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டினார். இதற்கு அமைச்சர் நேரு ஒப்பந்ததாரர் பணி முடிந்துவிட்டதாக ஓடிவிட்டார் என கூறினார்.

 அதன் பின்னர் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை திட்ட பணிகள் குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் துரைமுருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

 அப்போது அமைச்சர் துரைமுருகன் தெரிவிக்கையில், வேலூர் மாநகராட்சி சாலைகளுக்காக ரூ.280 கோடி வழங்க உள்ளோம். மேலும் பல்வேறு திட்டங்களில் மொத்தம் ரூ.314 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கேற்ப பணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 91 சதவீதம் முடிந்துள்ளது. 23 பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. விரைவில் அந்தபணிகள் முடிக்க தீவிரம் காட்டப்பட்டுள்ளது.

   பாதாள சாக்கடை திட்டத்தில் 29 கிலோமீட்டர் மட்டுமே பணிகள் முடிக்கப்பட வேண்டி உள்ளது. அந்த பணிகளும் முடிக்கப்படும்.

  பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள் அமைக்கும் பணி மற்றும் சீரமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட உள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். ரூ.7 ஆயிரம் கோடி செலவில் பணிகள் நடந்துள்ளது. காவிரி குடிநீர் வழங்கும் பொருட்டு வேலூர் , திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ரூ.14 கோடி மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளோம்,

  நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அது எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரியவில்லை செயல்படுத்தப்படும் என்று கூறினார்