போலிசாருக்கு சூப்பர் மார்க்கெட்! எஸ்.பி.துவக்கினார்!!

G.K.Sekaran,
காவலர்கள் நலனுக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் பல் பொருள் அங்காடியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் .
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் பல்பொருள் அங்காடியை திறந்து வைத்த பின்னர் அங்காடியில் முதல் வியாபாரத்தை தொடங்கி வைத்தார்.
பிறகு பல் பொருள் அங்கன்வாடி பொருட்களை பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஸ்வேஸ்வரய்யன், முத்து கருப்பன், இனையவழி குற்ற பிரிவு இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு மற்றும் ஏராளமான காவல் துறை அதிகாரிகள் இந்த பல்பொருள் அங்காடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.