மேயருக்கு குடைபிடிக்க ஒரு ஆள்!

ம.பா.கெஜராஜ்,

 புயல், மழையைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.அவர்கள் பல பகுதிகளுக்கு நேரடியாக சென்று பணிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார்.

  இந்நிலையில் வேலூர் முள்ளிப்பாளையம் அருகேயுள்ள மாங்காய்மண்டி பகுதியில் தெருக்கள் மற்றும் காணாறு ஆகிய பகுதிகளில் விசிட் செய்து, அங்கு தேங்கிய நீர்களை அகற்ற பணிகளை முடுக்கிவிட்டார்.

  அப்போது அவர் மழைக்காக தானே குடைபிடித்துக் கொண்டு பணிகளை செய்தார்.

  இந்த சமயத்தில் அங்கு வந்த வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி சுஜதா குடைபிடிக்கவில்லை? மாறாக அவருக்கு ஒரு நபர் குடைபிடிக்க, மேயர் நடந்து வந்தார்.