வேலூர்-திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் பொதுத் தேர்வை பார்வையிட்டனர்!

G.K.Sekaran,
வேலூர்மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கியது 13904பேர் இந்த தேர்வினை 80 மையங்களில் எழுதுகின்றனர் இதனை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தொரப்பாடியில் நேரில் ஆய்வு.
வேலூர்மாவட்டம், வேலூர், காட்பாடி, கேவிகுப்பம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, அனைக்கட்டு ஆகிய பகுதிகளில் இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. இதில் 80 தேர்வு மையங்களில் 6196 மாணவர்களும் 7708 மாணவிகளும் என மொத்தம் 13904 மாணவர்கள் இந்தேர்தவினை எழுதுகின்றனர்.
இதில் தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வினை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஒருங்கிணைந்தவேலூர்,ராணிப்பேட்டை,திருப்பத்தூர் ஆகிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு 201 மையங்களில் நடக்கிறது இதில் 201 மையங்களில் 39489 மாணவ,மாணவிகள் இந்த 12 ஆம் வகுப்பு தேர்வினை எழுதுகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 12697 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.தமிழகம் முழுவதும் இன்று முதல் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பொதுத்தேர்வு துவங்கிய நிலையில்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ,ஆம்பூர் நாட்றம்பள்ளி,ஆலங்காயம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 58 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 136 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மொத்தம் 12697 மாணவ மாணவியர்கள் இன்று பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 136 பள்ளிகளை சேர்ந்த 6009 மாணவர்களும், 6688 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 697 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதும் மையத்தை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார் துறை சார்ந்த அதிகாரியிடம் மாணவர்களின் வருகை குறித்து கேட்டு அறிந்தார்.
உடன் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் இருந்தனர்.