டாஸ்மாக்கை இழுத்து மூடிய ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்! போதையில் போர் கொடி!!

டாஸ்மாக்கை இழுத்து மூடிய ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்! போதையில் போர் கொடி!!

கு.அசோக்,

 மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவின் பெயரில் காட்பாடி வள்ளிமலை கூட்டு சாலையில் உள்ள டாஸ்மாக் கடை  மூடல்.... நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதும் பொது மக்கள் மகிழ்ச்சி.

வேலூர் மாவட்டம், காட்பாடி, வள்ளிமலை கூட்டு ரோட்டில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. மதுபிரியர்கள், வேலை முடிந்து திரும்பும்போதும் வேலைக்கு செல்லும் போதும் இந்த கடையில்தான் சரக்கு வாங்கி அடிப்பது வாடிக்கை

 இதனால் அதிகமாக விற்பனையை தரும் இந்த கடையானது பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இருந்து வந்தது.. இந்த கடைக்கு எதிரிலேயே இரண்டு பள்ளிகள் மற்றும் கடைக்கு அருகில் மேல்நிலை பள்ளிகள் இரண்டும் இருப்பதாலும் இதை மூட வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு வகையில் கோரிக்கைகளை வைத்து வந்தனர்.

 ஆனாலும் இந்த கடை மூடப்படுவதில் அரசுக்கு விருப்பம் இல்லாத காரணத்தினால் மூடப்படாமல் இயங்கி வந்தது.

 ஆனால் தற்போது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் பெ.குமரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் நேற்று மாலை ஐந்து முப்பது மணிக்கு இந்த கடையை மூட சொல்லி அதிரடி உத்தரவிட்டார்.

 அவர் உத்தரவின் அடிப்படையில் கடை ஆனது உடனடியாக மூடப்பட்டது.

மதுக்கடை மூடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் வேலைக்கு சென்று திரும்பும்  பெண்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

 குறிப்பாக, கே.ஆர்.எஸ்.நகர், மிஷின் காம்பவுண்ட், பள்ளிக்குப்பம்கசம், வள்ளிமலை செல்லும் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

   அதே சமயத்தில் ப்பொழுதும் இந்த கடையை மட்டுமே நம்பி வந்த மதுப்பிரியர்கள் திடீரென்று இந்த கடை மூடப்பட்டதால் அப்செட்டான அவர்கள் வேறு கடையை நோக்கி ஓட துவங்கினர்.

ஆனால் மது பிரியர்கள் அங்கு வந்து கடை மூடி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் பலர் எங்களுக்கு காட்பாடியில் டாஸ்மார்க் வேண்டும் என்று போதையில் போர் கொடி தூக்கினர். பார்க்கவே வியப்பாக இருந்தது.