வீடு வீடாக சென்ற திருப்பத்தூர் ஆட்சியர்!

வீடு வீடாக சென்ற திருப்பத்தூர் ஆட்சியர்!

ஆர்.ரமேஷ்,

  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக உள்ள தெ.பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் வீடு வீடாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

 திருப்பத்தூர் மாவட்டம்  திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட திம்மனாமுத்தூர், மற்றும் பூங்குளம் பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்த பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று சரியான முறையில் பதிவிடப்பட்டுள்ளதா என்பதை தொலைபேசி செயலியின் வாயிலாக சரி பார்ப்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.,இ.ஆ.ப., அவர்கள் கள மேல் ஆய்வு மேற்கொண்டார்கள்.

 இந்த ஆய்வுகளில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.