வேலூர் சரகத்தில் 9 போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்!

வேலூர் சரகத்தில் 9 போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்!

ம.பா.கெஜராஜ்,

 வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் எம்.எஸ்.முத்துசாமி, ஐ.பி.எஸ். அவர்களின் உத்தரவின் பேரில் 9 போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 அந்த வகையில் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் கே.நாகராஜ், வேலூர் மாவட்டம் லத்தேரி சர்க்கிள் இன்ஸ்பெக்டராகவும், ஏற்கனவே லத்தேரி காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக இருந்த பி.ரமேஷ் வேலூர் மாவட்டம் பொன்னை காவல் நிலையத்துக்கும், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிக்கொண்டிருந்த எ.துரைராஜ், அதே மாவட்டத்தில் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 டிஜஜி அலுவலகத்தில் ஏற்கனவே ரிப்போர்ட் செய்திருந்த என்.நிர்மலா திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், பி.டெல்லிபாபு, வேலூர் மாவட்டம் பாகாயம் சர்க்கிள் இன்ஸ்பெக்டராகவும், டி.ராஜாங்கம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கிராமி காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், எம்.காஞ்சனா புரோமஷனில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், ஜெ.சி.சாந்தி, புரோமோஷனில் திருவண்ணாமலை மாவட்டம், மேல் செங்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், மேல் செங்கம் இன்ஸ்பெக்டராக இருந்த எம்.செல்வராஜ் அதே மாவட்டத்தில் செங்கம் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.