டபுள் டக்கர் ரயிலில் புகை பயணிகள் பீதி! ரயில்வே ஊழியர்களின் சாமர்தியத்தால்

கு அசோக்,
சென்னையில் இருந்து பெங்களூர் வரை செல்லும் டபுள் டக்கர் ரயில், வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த விரிஞ்சிபுரம் அருகே செல்லும் பொழுது சி -6 பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது. இது குறித்து தெரிய வந்ததும் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.பயணிகள் பீதி அடைந்து ரயிலைவிட்டு உடனடியாக வெளியேறினர்.
பின்னர் ரயிலில் இருந்த மெக்கானிக்கை வைத்து புகை வந்ததற்கான காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது உடனடியாக பயணிகள் ரயிலில் ஏறி அமர்ந்தனர். இந்நிலையில்பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயிலி புகை வந்ததால் ஏற்பட்ட பரபரப்பு சுமார் சுமார் 12 நிமிடம் நீடித்த நிலையில் டபுள்டக்கர் ரயில் சற்று காலதாமதமாக புறப்பட்டு சென்றது.