வெடிகுண்டு குவியல் அழிப்பு! திருப்பத்தூரில் பரபரப்பு!!

ஜி.கே.சேகரன்,
காப்பு காட்டில் வனத்துறை மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு குழுவினர் 21 நாட்டு வெடிகுண்டுகளை பாதுகாப்பாக வெடிக்கவைத்து செயலிழக்க செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள நரசிங்கபுரம் காப்பு காட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் வன விலங்குகளை வேட்டையாட மர்ம நபர்கள் நாட்டு வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருந்ததை அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் கண்டறிந்தனர்.
அப்போது அங்கிருந்து 21 நாட்டு வெடிகுண்டுகளை மீட்டு பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று மாவட்ட உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார்,வனசரக அலுவலர் சோம சுந்தரம் மற்றும் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.
அவர்களுடன், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்குழு ஆய்வாளர்கள் ஜெயராமன்,தங்கேஷ்வரன் தலைமையிலான வெடிகுண்டு நிபுணர்குழு மற்றும் போலிசார் குழு தலைமையில் ஒதுக்குபுறமாக உள்ள நரசிங்கபுரம் காப்பு காட்டில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி அங்கு பாதுகாப்பாக வெடிக்க வைத்து செயலிழக்க செய்தனர்.
இந்த இடத்தில் நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் போது அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க தீயணைப்புதுறை ,மருத்துவப் பிரிவு, காவல்துறை உள்ளிட்ட துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்,