பொறியியல் மாணவி மீது பாலியல் வழக்கு! பொய் என்று கண்ணீர் பிரஸ் மீட்!

க.முகில்,
சென்னையில் பொறியியல் பட்டதாரி பெண் மீது பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டு 13 நாள்கள் காப்பகத்தில் அடைத்தனர். என் மீது போட்ட வழக்கு பொய்யானது என்று கண்ணீர் சிந்திய அந்த பெண் சென்னை பிரஸ் கிளப்பில் பேட்டியளித்தார்.,
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு நடந்ததை பார்ப்போம்.
சென்னைக்கு வேலை தேடி வந்த அந்தப்பெண் தியாகராய நகரில் மசாயா ஸ்பா என்ற நிறுவனத்தில் புரமோட்டராக, ஆன்லைனில் பணியாற்றினார்.
அக்டோபர் 1ம் தேதி சம்பளம் வாங்க ஸ்பாவுக்கு சென்றபோது, அந்த பெண்ணையும், பணியிலிருந்த 3 பெண்களையும் பாலியல் தொழில் செய்ததாகக் கூறி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுபற்றி அவர் கூறுகையில், ஆன்லைன் மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்தியபோது தனது தரப்பில் விளக்கமே கேட்கப்படவில்லை என்றும், காவல் துறையும் நீதித்துறையும் தனக்கு அநீதி இழைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டினார்.
13 நாட்ககள் காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டு, தற்போது வழக்கிலிருந்து வெளிவந்திருப்பதாகவும், தீர விசாரிக்காமலும், என் தரப்பு நியாயத்தை கேட்காமலும் தன்னைக் கைது செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த பெண் கேட்டுக் கொண்டார்.
போலிசின் பொய்யான நடவடிக்கைகளுக்கு எதிராக நீதி கிடைப்பது ரொம்பவே கடினம் அல்லவா?