குளத்தில் விழுந்து இறந்த சிறார்களின் கடைசி சிரிப்பு!தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்!

குளத்தில் விழுந்து இறந்த சிறார்களின் கடைசி சிரிப்பு!தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்!

கு.அசோக்,

  ஆம்பூர் அருகே விடுமுறையில் மலைப்பகுதிக்கு சுற்றிக் காண்பிக்க குழந்தைகளை அழைத்துச் சென்ற  தந்தை கண் முன்னே கோயில் குளத்தில்  மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததால் துயரம் தாங்க முடியாமல் தந்தை விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

 

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கைலாசகிரி மலை பகுதியில்  பழமை வாய்ந்த முருகர் ஆலயம் உள்லாஊ. 

 

  ஊத்தங்கரை  பகுதியை சேர்ந்த ஐஸ் வியாபாரம் செய்பவர் லோகேஸ்வரன்.

 

 இவர் அவரின் மனைவி மீனாட்சி மற்றும் 8 வயது ஹரிப்பிரியா 6 வயது யஸ்வந்த் ஆகிய குழந்தைகளுடன் ஆம்பூர் அருகே உள்ள கடம்பூர் பகுதியில் தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளனர்.

 

 இந்த நிலையில் கைலாசகிரி மலைப்பகுதியில் உள்ள முருகன் கோவிலில் உள்ள குளத்தில் தனது இரு பிள்ளைகளுடன் லோகேஸ்வரன் மீன்பிடிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

 

  நேற்று கோயில் பூட்டி உள்ளதால் பக்தர்கள் பொதுமக்கள் யாரும் மலைப்பகுதிக்கு வராமல் வெறிச்சோடி இருந்தது.

 

   அந்த மலைக்கு பெற்றோர்களுடன் சென்ற சிறார்களை மலைமீது நிற்க வைத்து தந்தை அழகான போட்டோ ஒன்றை எடுத்தார். அதுதான் கடைசி போட்டோ என்று தெரியாத அந்த சிறுவர்கள் அழகாக போஸ் கொடுத்தனர்.

 

 பின்னர்,  லோகேஸ்வரன் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக  ஹரிப்பிரியா குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கினாள்.

 

 இதனைக் கண்ட தம்பி யஸ்வந்தும் நீரில் குதித்துள்ளார். நீச்சல் தெரியாமல் குளத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த குழந்தைகளை மீட்க லோகேஸ்வரன் நீண்ட நேரம் போராடினார், ஆனால் நீரில் மூழ்கி இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

 

   இதனை அறிந்த உமராபாத் காவல்துறையினர் மற்றும்  தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு சிறுவர்களின் உடல்களை  மீட்டு சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் குழந்தைகளின் உடல்களை டோலி கட்டி சுமந்து வந்து பிரேத பரிசோதனைக்காக  ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 இதுதொடர்பாக உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

   தங்கள் கண் முன்னே பிள்ளைகள் இறந்ததை பார்த்த தாய் மீனாட்சி கதறி அழுதது மனதை பிசைந்தது.

 

  இந்த நிலையில் லோகேஸ்வரனும் அவரது மனைவி மீனாட்சியும் குழந்தைகள் இறந்த துக்கம் தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு சென்று குளிர்பானத்தில் விஷம் கலந்த நிலையில், முதலில் லோகேஸ்வரன் குடித்துள்ளார்.

 

  அதனை பிடுங்கி மனைவி மீனாட்சியும் குடிக்க முற்பட்ட போது லோகேஸ்வரன் அதனை கீழ் தட்டிவிட்டு சம்பவ இடத்தில் லோகேஸ்வரன் இறந்துள்ளார்.

 

 குழந்தைகள் இரண்டு பேரும்ன் நீரில் மூழ்கி பலியான நிலையில் அவர்கள் தந்தையும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

  இது போன்ற சம்பவங்கள் நிகழாதபடிக்கு பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.