197 கோடி அரசுப் பணம் வேஸ்ட்! மணல் வீடா கட்டியிருக்கீங்க?

197 கோடி அரசுப் பணம் வேஸ்ட்! மணல் வீடா கட்டியிருக்கீங்க?

 சுகன்யா முரளிதரன்,

 குடிமராமத்து என்கிற பெயரில் 197 கோடி அரசுப் பணம் செலவிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் பல மணல் வீடுகள் போல உள்ளது.

 சாமானியனின் வரிப்பணத்தை வீணாக்கி டெண்டர் மூலம் நடைபெற்ற தரமற்ற  பணிகளை மறுசீராய்வு செய்து, தரமற்ற பணிகளில் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது.

 தேனி மாவட்டத்தில் கட்டமைக்கப்பட்ட பி.டி.ஆர். வாய்க்கால் புனரமைப்பு பணிகள்

 தரமில்லாமல் உள்ளது.

 உதாரணத்துக்கு தேனி தெற்கு மின் வாரியத்தினால் அமைக்கப்பட்ட மின்கம்பம் வேரோடு சாய்ந்து விழுந்ததுள்ளது.

 மேற்கண்ட குடிமராமத்து பணி, பரமத்தேவன்பட்டி, முல்லைப்பெரியாறு பிரிவில் தொடங்கி சின்னமனூர், சீலையம்பட்டி சமத்துவபுரம், வேப்பம்பட்டி, பூமலைக்குண்டு, ஜங்கால்பட்டி,  பாலகிருஷ்ணாபுரம் வரை செய்யப்பட்டது.

 அதில், சின்னமனூரினை சுற்றி கட்டி முடிக்கப்பட்ட பி.டி.ஆர். கால்வாயினில் குடிகொண்டிருந்த முட்புதர்களை நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்களை பயன்படுத்தி அகற்றி தூய்மைப்படுத்திட தவறியுள்ளார்கள்.

 இதனால் அவை விவசாயிகளுக்கு பயனற்றதாக்கியுள்ளது.

 ஏற்கனவே  நன்றாக  இருந்த கால்வாயினை தற்போது ரூ.197 கோடியே ஒரு இலட்சம் செலவில் 45 கி.மீ சுற்றளவில் பெயரளவுக்கு மட்டுமே பணிகள் நடைபெற்றுள்ளது.

  இந்த வாய்க்கால் குடிமராமத்து பணிகள் தரமானதாக இல்லையென பொதுமக்கள் கடந்த மார்ச் மாத தொடக்கத்திலிருந்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

 ஏனோ,தானோ என நடைபெற்று முடிந்த தரமில்லாத பி.டி.ஆர்.வாய்க்கால் பணியினை தரமற்ற முறையில் செய்து முடித்து பொதுமக்களின் வரிப்பணத்தை வாரி,வாரி வழங்கி வீணாக்கிய சம்பந்தபட்ட அரசுத் துறையினர் மற்றும் ஒப்பந்தகாரரை முறையாக விசாரித்து, திடமான பி.டி.ஆர். வாய்க்காலினை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

 தரமில்லாமல் நடந்த பி.டி.ஆர்.பணிகளை மறுசீராய்வு செய்து இதற்கு காரணமான அரசுப் பணியில் அலட்சியப் போக்கை கடைபிடித்தவர்களை இனம் கண்டு சட்டத்திற்கு முன்னிறுத்தி  தண்டிக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.