ஸ்பிரே கொள்ளையர்கள் வேலூரில் ஊடுறவலா?

ஜி.கே.சேகரன்,
நூதன கொள்ளையர்கள் வேலூரில் ஊடுறவலா என்று பலரும் அஞ்சுகிறார்கள்.
அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் பகுதியில் அடுத்தடுத்த 4 வீடுகளில் கொள்ளை முயற்சி. 42 சவரன் தங்க நகைகள், 900 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருட்டு. மயக்க ஸ்ப்ரே அடித்து திருட்டு வேலையை செய்ததே இந்த அச்சத்துக்கு காரணம்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பாஸ்கரன். சம்பவதன்று அதிகாலையில் வீட்டின் பின்பக்க கதவுகளை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டில் புகுந்து அங்கிருந்தவர்களுக்கு மயக்க ஸ்ப்ரே அடித்து பீரோவில் வைத்திருந்த சுமார் 42 சவரன் தங்க நகைகள், 900 கிராம் எடை கொண்ட வெள்ளி பொருட்கள் மற்றும் ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
காலை 8 மணியை கடந்தும் மயக்கம் தெளியாமல் இருந்தவர்கள் பின்னர் எழுந்து பார்த்தபோது வீட்டில் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. குறித்து உடனடியாக அணைக்கட்டு காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து காவல் துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.
இதேபோன்று அருகில் உள்ள அடுத்தடுத்த நான்கு வீடுகளில் வீட்டின் கதவுகளை உடைத்து திருட்டில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து அணைக்கட்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.