வாணியம்பாடி சரக்கு ரயிலில் கொள்ளை முயற்சியா?

கு.அசோக்,
வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது கல் எறிவது மற்றும் ரயில்வே இருப்புப் பாதையில் கற்கள் அடுக்கி வைப்பது உள்ளிட்ட மர்ம நபர்களின் அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையில் மத்திய ரயில்வே இருப்புப் பாதை பாதுகாப்பு படையினர் மோப்ப நாயுடன் சோதனை மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம்; வாணியம்பாடி ரயில்வே காவல் நிலையம் ஹோம் சிக்னலுக்கு உட்பட்ட பகுதிகளில் சரக்கு ரயில் மீது நேற்று மர்ம நபர்களால் கல்லெறிந்த சம்பவத்தை தொடர்ந்து ரயில்வே இருப்புப் பாதையில் கற்களை அடுக்கி வைப்பது ரயில்வே பயணிகளிடம் செல்போனை பறித்து செல்லும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
இப்பகுதியில் குற்ற சம்பவங்களை கண்காணிக்க மத்திய ரயில்வே இருப்பு பாதை பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர், கோனாமேடு உள்ளிட்ட குடியிருப்பு பகுதி மக்களிடம் ரயில்வே இருப்புப் பாதையை யாரும் கடக்க கூடாது ரயில்கள் மீதும் கல் எறிய சம்பவம் நடந்துள்ளதால் இனி இதுபோல நடைபெறுவதை யாரேனும் இனி நேரில் கண்டால் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
புதிய நபர்கள் ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை பார்த்தால் உடனடியாக ரயில் நிலையத்தில் உள்ள காவலர்களிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் தலைமையிலான துணை காவல் ஆய்வாளர் குமரேசன் உள்ளிட்ட ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இது பற்றி ஒரு போலிஸ்காரர் தெரிவிக்கையில் சரக்கு ரயிலை நிற்கவைத்து கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டு வருகிறது.
அவர்கள் கைவரிசைதான் இது. அவர்களை அடக்கிவைப்போம் என்றார்.
ஓகே...ஓகே..!