தவறான சிகிச்சையால் கால்பந்தாட்ட மாணவி இறந்தார்!

ம.பா.கெஜராஜ்,
உலக கோப்பை கால் பந்தாட்டம் வரும் 23 ஆம் தேதி கத்தார் நாட்டில் துவங்க உள்ள நிலையில் கால்பந்தே வாழ்க்கை என்று இருந்த மாணவி உயிரிழந்தார்.
இது பற்றின விவரம் வருமாறு,
அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்தாட்ட மாணவி இன்று உயிரிழந்தார். இதனால் ராஜிவ் காநி அரசு மருத்துவமனையில் போலிசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி பிரியா. கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்து வந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த அவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்ச்சியும் பெற்று வந்தார்.
சமீபத்தில் பயிற்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் ராஜிவ்காந்தி மருத்துவமனையின் அறிவுறைப்படி கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு காலில் வலி அதிகமாக இருந்ததாக கூறி கதறியிருக்கிறார்.
இதனால் மாணவிக்கு தொடர்ச்சியாக மூன்று ஊசிகள் போடப்பட்டும் வலி நிற்கவில்லை.
எனவே ஸ்கேன் எடுத்து பார்த்திருக்கிறார்கள், அதன் பின்னர் அவசர அவசரமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கி குழுவினர் செய்த பரிசேதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்ற வேண்டும். இல்லை என்றால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வேறு வழியில்லாமல் காலை அகற்ற அவர்கள் சம்மதித்தனர்.
இதனை தொடர்ந்து கால்பந்து வீராங்கனையின் கால்களை மருத்துவர்கள் அகற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவர்களின் அலட்சிய போக்கு மற்றும் தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்க காரணம். அந்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்களின் மகளின் வாழ்வாதாரம் கருதி அரசு வேலை அமைத்து தரவேண்டும் என்று பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிகைக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது மாணவிக்கு உள்ள காயம் சரியான உடன், பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும் என்றும், அந்த மாணவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். மருத்துவக்குழு அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் மாணவிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீரங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருத்துவமனையில் உறவினர்கள் குவிந்து வருவதால் போலிசார் அங்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.