கடத்தல் அரிசி பறிமுதல்!டிரைவர் ஓட்டம் !?

கடத்தல் அரிசி பறிமுதல்!டிரைவர் ஓட்டம் !?

 கு.அசோக்

 நாட்றம்பள்ளி பகுதியில் கடத்தி செல்லப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் மினி லாரியிபறிமுதல்- வருவாய்த் துறையினர் நடவடிக்கை

  திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூரில் ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வட்டாட்சியர் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

  அதன் அடிப்படையில்  விடியற்காலை பச்சூரிலிருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் சாலையில் வட்டாட்சியர் குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

   அப்போது பச்சூர் பஜார் பகுதி வழியா வந்த மினி லாரியை  சோதனை செய்வதற்காக நிறுத்திய போது  ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.

  பின்னர் லாரியை சோதனை செய்தபோது மினி லாரியில் சுமார் 5 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் ரேசன் அரிசி மூட்டைகளுடன் லாரியை வாணியம்பாடி உணவு பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் குமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது