500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற கராத்தே போட்டி!

500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற கராத்தே போட்டி!

கு.அசோக்,

 கராத்தே போட்டிகள் 500-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்

 வேலூர் மாவட்டம்,ரங்காபுரத்தில் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.  இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் வெற்றி பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெற உள்ள மாநில கராத்தே போட்டிக்கு தேர்வாக உள்ளனா.¢ இந்த போட்டிகளை மாநில கராத்தே சங்க தலைவர் ஜேக்கப் தேவகுமார் மற்றும் மாநில பொதுச் செயலாளர் அல்தாப் ஆலம் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர்.

  வேலூர் மாவட்ட கராத்தே சங்க தலைவர் ஷேக் அப்துல்லா அவர்களின் ஒருங்கிணைப்பு முன்னிலையில் நடைபெற்றது போட்டிகளில் வென்று மாநில அளவிலான போட்டிகளில் தேர்வு பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.