கலெக்டர்களின் கலக்கல் விசிட்!

ஆர்.ரமேஷ்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் சின்ன கங்கா நல்லூரில் 180 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை குட்டை அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் ஆய்வு செய்தார் உடன் உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா வருவாய் கோட்டாட்சியர் செல்வி விஷ்ணுபிரியா மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு பாபு மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருந்தனர்.
அதேபோல் கங்கா நல்லூரில் மழை கால்வாயில் 26.93 லட்சம் மதிப்பீட்டில் நீர் உறிஞ்சி குழிகள் அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார்.
அதேபோல் பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
ஆட்சியர் அலுவலக ஐந்தாம் தளத்தில் வேலூர் மாவட்டத்தில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைப்பது விரிவாக்கம் செய்வது மற்றும் பராமரிப்பது தொடர்பாக காவல் துறை போக்குவரத்து காவல்துறை மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் துறை அலுவலர்கள் வருவாய் கோட்டாட்சியர்கள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆலோசனை நடத்தினார்.
திருப்பத்தூர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் செவ்வாத்தூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாகா இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு செயற்பொறியாளர் சுந்தரபாண்டியன், உதவி செயற்பொறியாளர் சாலைகள் மற்றும் பாலங்கள் பழனிச்சாமி, கந்திலி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனா.¢
அதேபோல் கந்திலி ஊராட்சி ஒன்றியம் குனி¢ச்சி ஊராட்சியில், மோட்டூர் கிராமத்தில், மோட்டூர் காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை சரியான அளவில் உள்ளதா என்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும் தாய்யப்பன் மேட்டுக் கொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாடம் கற்பித்தார்
அதேபோல் கசிநாயக்கன் பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை அமைக்கும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.