சிறப்பு கடன் மேளா! அள்ளிச்செல்லுங்க - ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்!

சிறப்பு கடன் மேளா! அள்ளிச்செல்லுங்க - ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்!

ம.பா.கெஜராஜ்,

வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 15.02.2023 முதல் 17.02.2023 வரை நடைபெறும் சிறப்பு கடன் மேளா முகாம்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின பெருமக்கள் விண்ணப்பித்து கடன்பெற்று பயனடையுமாறு மாவட்ட  ஆட்சித்தலைவர் திரு. பெ.குமாரவேல் பாண்டியன், ..., அவர்கள் தெரிவித்துள்ளார்.

 தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலமாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் மற்றும்  சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மக்கள் சமூக மற்றும் பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில், தனிநபர் கடன், சுய உதவிக்குழுக் கடன், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கி வருகிறது.

                        வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி இணைந்து வேலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின பெருமக்கள் பயன்பெறும் வகையில் கீழ்காணும்  வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலமாக “டாப்செட்கோ மற்றும் டாம்கோ சிறப்பு கடன் மேளா” காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நடைபெறவுள்ளது.

எண்

முகாம் நடைபெறும் நாள்

முகாம் நடைபெறும் இடம்

1

15.02.2023

காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் ( 10.00 மு.ப முதல் 5.00 பி.ப வரை )

 

2

கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் ( 10.00 மு.ப முதல் 5.00 பி.ப வரை )

 

3

16.02.2023

குடியாத்தம் வட்டார  வளர்ச்சி அலுவலகம் ( 10.00 மு.ப முதல் 5.00 பி.ப வரை )

 

4

பேர்ணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் (10.00 மு.ப முதல் 5.00 பி.ப வரை )

 

5

   17.02.2023

அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் (10.00 மு.ப முதல் 5.00 பி.ப வரை )

 

6

வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் (10.00 மு.ப. முதல் 01.00 பி.ப வரை)

கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் ( 02.00  பி.ப முதல் 05.00 பி.ப வரை)

டாப்செட்கோ  மற்றும்  டாம்கோ  கடன் பெற தேவையான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:

1

கடன் வழங்கும் நோக்கம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் (ம) சிறுபான்மையினர்களான  இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சியர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் தொழில் செய்வதற்கான கடன் உதவி திட்டம்.

2

தகுதி

அ. கிளையின் எல்லைக்குட்பட்டு வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் (ம) சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தனிநபர் இக்கடன் பெற தகுதியுடையவர்கள்.

ஆ. ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி அளிக்கப்படும்.

இ. வருமானவரம்பு: குடும்ப ஆண்டு வருமானம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டேர் / சீர்மரபினர் இனத்தவராயின் ரூ.3,00,000/-க்கு மேற்படாமலும், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களில் கிராமப்புறமாயின் ரூ.98,000/-க்கு மேற்படாமலும், நகர்புறமாயின் ரூ.1,20,000/-க்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

3

வயது

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

4

கடன் விவரம்

1.        சில்லரை வியாபாரம் மற்றும் வியாபார அபிவிருத்தி.

2.       கைவினைஞர் மற்றும் மரபுவழி சார்ந்த தொழில்கள்   

           அபிவிருத்தி.

3.       தொழில் மற்றும் தொழில் சேவை நிலையங்கள்.

4.       விவசாயம் தொடர்பான தொழில்கள்.

5

கடன் அளவு

1.        அதிகபட்ச கடன் தொகை ரூ.20,00,000/-

2.       இதில் பயனாளரின் பங்கு 5%

3.  பண்ணைச்சார கடன் பிரிவில் வியாபாரம் தொடர்பான அடமானக் கடன் மனு மூலம் அடமானக்கடனுக்கு பின்பற்றப்படும் ஒழுங்குமுறை விதிகளின்படி இக்கடன் அனுமதிக்கப்படும்.

6

வட்டி

ஆண்டு வட்டி விகிதம் 5% முதல்.

7

திருப்பி செலுத்தும் கால வரம்பு

3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை.

 

 

8

ஆவணங்கள்

அடமான சொத்தின் கிரைய பத்திரம், மூலப்பத்திரம், 13 ஆண்டுகள் வில்லங்க சான்று, வழக்கறிஞர் கருத்துரை மற்றும் பொறியாளர் சொத்து மதிப்பு சான்று பெறப்பட வேண்டும்.

9

சான்றுகள்

1.       சாதிச்சான்று,

2.      வருமானச்சான்று,

3.      இருப்பிடச் சான்று,

4.      குடும்ப அட்டை நகல்,

5.      விலைப்புள்ளி,

6.     ஆதார் அட்டை நகல்.

10

பட்டுவாடா

1.         கடன்தாரரையும், பிணையதாரரையும் இணை

உறுப்பினராக சேர்க்க வேண்டும்.

2.         கடன்தாரர் பெயரில் சேமிப்பு கணக்கு துவங்கப்பட வேண்டும்.

3.         டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் தொகை, டாப்செட்கோ மற்றும் டாம்கோவிலிருந்து விடுவித்து வங்கிக்கு வரப்பெற்ற பின் கடன் பட்டுவாடா செய்யப்படும்.

 

                        மேற்காணும் இடங்களில் நடைபெறும் முகாமில் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மக்கள் கலந்துகொண்டு விண்ணப்பித்து கடன்பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு  அலுவலர்,

                      வேலூர் மாவட்டம்.