அரசு பேருந்துகள் சரியான நேரத்திற்கு வருவதில்லை! சரி செய்வதாக ஆட்சியர் உறுதி!

ஜி.கே.சேகரன்,
வேலூர்மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த நிலையில் பேருந்துகள் காலதாமதம் என மக்கள் கூறிய புகாரை சரி செய்யும் என மாவட்ட ஆட்சியர் பேட்டி
வேலூர்மாவட்டம், வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் பயண வசதிகள் குறித்த குறைபாடுகள் மற்றும் இதர வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது,பெரும்பாலான பெண்கள் அரசு பேருந்துகள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என கூறினர்.
தூய்மை பணி சரியாக செய்யாததால் ஆட்சியர் அதிகாரிகளிடம் கூறி சரி செய்ய உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறுகையில் தமிழ்நாடு அரசு மகளிருக்கு பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் குறித்து ஆய்வு செய்தோம்.
பயண சீட்டு இலவச பயண சீட்டு வழங்குமாறு நடத்துநருக்கு அறிவுறுத்தியுள்ளோம். மேலும் பேருந்துகள் சரியான நேரத்திற்கு இயக்க அறிவுறுத்தியுள்ளோம் இதுவரையில் கட்டணமில்லா பேருந்து பயணத்தில் 82417 பெண்கள் பயனடைந்துள்ளனர் என கூறினார்.