உயர் ரக போதை பொருட்கள் விற்பனை!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
அன்னூர் பகுதியில் உயர் ரக போதை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த 2 நபர்கள் கைது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் அன்னூர் பகுதியில் தனிப்படையினர் சோதனையிட்டனர்.
அப்போது அங்கு உயர் ரக போதை பொருள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து கோவை மாவட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான அன்னூர் பசூர் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு உயர் ரக போதை பொருளான மெத்தான்பெத்தடிமென்-ஐ வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜாய் மகன் ஜின்சன் (29) மற்றும் குரியோஸ் மகன் ஷான்சன் (34) ஆகிய 2 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.24,000/- மதிப்புள்ள 8 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் மற்றும் இரண்டு சக்கர வாகனம்-2 ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
அதே போல் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான பெரியநாயக்கன் பாளையம் (வீரபாண்டி முத்தமிழ் நகர்) பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை வைத்திருந்த கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் ராகுல் (26), அதே பகுதியை சேர்ந்த தண்டாயுதபாணி மகன் கிரிதர் (24) மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் மகன் யுவநந்து (21) ஆகிய 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 2.400 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.