பரீதா ஷுஸ் &டேனரி தொழிற்சாலைகளில் வருமானவரித்துறையினர் சோதனை!

G.K.Sekaran,
இராணிப்பேட்டை, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரீதா ஷுஸ் &டேனரி தொழிற்சாலைகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை நகரில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய கே.எச். ஷுஸ் & டேனரி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் காலை முதல் தொழிற்சாலை முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் துத்திபட்டு,மேட்டுகொல்லை,சின்னவரிகம் உள்ளிட்ட பகுதிகளில் பாபு என்பவருக்கு சொந்தமான பரிதா ஷுஸ் தோல் தொழிற்சாலைகளில் 10 தொழிற்சாலைகளில் வருமானவரித்துறை அதிகாரி கிருஷ்ணகாந்த் தலைமையில் 160 பேர் கொண்ட குழுவினர் 25 கார்களில் வந்து இந்த இடங்களில் வருமானவரித்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சோதனை முடிந்த பின்னர் தான் என்ன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரியவரும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதேபோல் பேர்ணாம்பட்டு மற்றும் வேலூர் ஷு கம்பெனி தொழிற்சாலைகளில் வருமான வரித்துறையினர் சோதனை
வேலூர்மாவட்டம்,பேர்ணாம்பட்டு விகோட்டா சாலையில் பரிதா பாபுவின் இந்தியா ஷுஸ் நிறுவனத்தில் 2கார்கள் எட்டு பேர் கொண்ட குழு அடங்கிய வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நுழைவாயிலில் போடப்பட்டு உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து சோதனையும் நடந்து வருகிறது