வெல்டிங்கடையில் கைவிலங்கை வெட்டி தப்பித்த திருடன் மீது குண்டாஸ்!

ஜி.கே.சேகரன்,
கடந்த சில வாரங்களுக்கும் முன் பலே திருடன் ஒருவன் போலிசாரிடம் சிக்கினான். அவன் தப்பிக்காதபடி அவனுக்கு கைவிலங்கு போடப்பட்டது. இருந்த போதும் வெல்டிங் கடையில் கைவிலங்கை வெட்டி எரிந்து தப்பித்தான். அதன் பின் மீண்டும் கைது செய்யப்பட்ட திருடன் மீது தற்போது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
இது குறித்த விவரம் வருமாறு,
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவராக சுவிதா என்பவர் உள்ளா£.¢ இவருடைய கணவர் கணேஷ் இவர் மீது வெளியூர்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கணேஷ் மற்றும் சுவிதா கணேஷ் ஆகியோர் அவருடன் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து எல்.மாங் குப்பம் பகுதியில் அம்பேத்கரின் 65வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து விட்டு திரும்பிய போது திடீரென்று அங்கு காரில் வந்த கோயம்புத்தூர் தனிப்படை காவல் துறையினர் கணேசை கைது செய்து காருக்குள் ஏற்றி கைவிலங்கிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
காவல்துறையினர் சாதாரண உடையில் இருந்ததால் அங்கிருந்த.திமுக மற்றும் பொதுமக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கோயம்புத்தூர் தனிப்படையினர் வந்த காரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனிப்படை காவலர்கள் கணேஷுக்கு மாட்டிய கைவிலங்கை அங்குள்ள ஒரு வெல்டிங் கடையில் உடைத்து அங்கிருந்து வெளியேற்றினர்.
இதனால் காவலர்களுக்கும் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் கோயம்புத்தூர் தனிப் படை தலைமைக் காவலர் ராஜாமுகமது மற்றும் காவலர் வடிவேலு ஆகிய இருவரும் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் துத்திபட்டு பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கணேசன் வீட்டு முன்பு திரண்ட பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் கணேஷ் கைது செய்ய வந்தால் நாங்கள் தீக்குளிப்போம் கோஷமிட்டனர் இதனால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
இந்த நிலையில் கோவை புதுச்சேரி சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய திமுக பிரமுகர் கணேசனை கோயம்புத்தூர் தனிப்படை போலீசார் கடந்த ஆறாம் தேதி கைது செய்ய வந்த போது அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கை விலங்கை உடைத்து தப்பிச் சென்றவர்களை கைது செய்ய திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் கணேசனின் ஆதரவாளர்கள் 10 பேரை கைது செய்தனர்.
மேலும் கடந்த 10:12:22 ஆம்தேதி ஆம்பூர் பகுதியில் சுற்றித்திரிந்த கணேசனை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று தேவலாபுரம் பகுதியிலுள்ள மலையடிவாரத்தில் சுற்றி வளைத்து பிடித்தனா.
மேலும் அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர் இந்த நிலையில் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கணேசன் மீது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் வைக்க மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவு பிறப்பித்துள்ளார் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.