கஞ்சா பறிமுதல்-மூவர் கைது!

கு.அசோக்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பதாக வந்த தொடர் புகாரையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின்பேரில் குடியாத்தம் காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையில் தரணம்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியை சேர்ந்த முபாரக், சாதிக்பாஷா,சம்சுதின், ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.