கணவரின் நண்பரும், கள்ள காதலனும்...போயே போச்சு!

கு.அசோக்,
கணவனின் நண்பரோடு ஏற்பட்ட நட்பு கள்ளக்காதலாக மாறிய அவலம் - கணவருக்கு தெரிய வந்ததால் கள்ளக்காதலனுடன் ஒரே மரத்தில், தன் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்.
இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த வெள்ளகுளம் கிராமத்தில் கள்ளக்காதல் விவகாரம் கணவனுக்கு தெரிய வந்ததால், கள்ளக்காதலனுடன் வேப்பமரத்தில் ஜோடியாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமிரி அடுத்த வெள்ளகுளம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி சரிதா(34). இவர்களுக்கு சரண்யா(19) என்ற திருமணமான மகளும், பாலா என்ற மகனும் உள்ளனர்.
ராஜேந்திரன் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார்.
ராஜேந்திரனின் நண்பரான வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி(36). இவருக்கு திருமணமாகி நந்தினி(5), ஷாலினி(3) என்ற இரு மகள்கள் உள்ளனர். ராஜேந்திரனின் மனைவியான சரிதா அவ்வப்போது தன் கணவருடன் கட்டிட வேலைக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது.
அப்போது தன் கணவரின் நண்பரான பாரதி என்பவருடன் நட்பு ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்த முறையற்ற உறவு குறித்து ராஜேந்திரனுக்கு தெரியவந்ததை தொடர்ந்து தன் மனைவி சரிதாவை கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சரிதா, தனது கள்ளக்காதலன் பாரதியை வெள்ளக்குளம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சந்தித்து, சரிதா அணிந்திருந்த புடவையைக் கொண்டு வேப்பமரத்தில் ஜோடியாக தற்கொலை செய்து கொண்டனர்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின் பேரில், திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது- அவர்களிடம் இருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்.