தவறான சிகிச்சையால் இறப்பு:- பி-வெல் ஆஸ்பத்திரி உடைப்பு!

அ.அரவிந்த்,
கடலூரில் உள்ள பி-வெல் என்கிற தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்களால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது கடலூர் பாரதி சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக சாவடி பகுதியைச் சேர்ந்த மீனா என்ற பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அந்த பெண் திடீரென உயிரிழந்ததால், உறவினர்கள் மருத்துவமனையை அடித்து உடைத்தனர். 58 வயதான மீனாவுக்கு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறவே அதற்கு உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை மீனாவிற்கு கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அப்படியிருக்க நேற்று (திங்கள்கிழமை) பிற்பகலில் மீனா உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம தெரிவித்துள்ளது. இதை கேட்ட உறவினர்கள் அதிர்ச்ச அடைந்தனர். மேலும் மருத்துவமனையின் தவறான சிகிச்சை முறையே மீனாவின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றம் சாட்டி சவுண்டு பிட்டனர்.
ஆனால் மீனாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் தான் உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகத்தினர் விளக்கம் அளித்தனர். இதை ஏற்க மறுத்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்தனர். இரு தரப்பினரும் தனித் தனியாக புகார் பெற்று விசாரித்தனர்.