இரண்டு கோயில்களில் மர்ம நபர் கொள்ளை! உண்டியலை தூக்கிச் சென்றான்!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி, அடுத்த பந்தரப்பள்ளி அடுத்த நெக்குந்தியன் வட்டம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு மர்ம நபர் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தாலி மற்றும் உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளார்.
பின்னர் அதே பகுதியில் உள்ள மற்றொரு காளியம்மன் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து தூக்கி தோல் மீது வைத்து நடந்து செல்லும் காட்சியும் அருகே உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள் உண்டியல் உடைந்து பார்த்த போது மக்கள் நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நாட்டாறம்பள்ளி போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.