பலே மோட்டார் பைக் திருடர்கள் சிறையில் அடைப்பு!

கு.அசோக்,
ஆற்காடு பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்களை மத்திய சிறையில் அடைத்து உத்தரவிட்ட நீதிமன்றம்.
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்(23) சூர்யா(19) ஆகிய இரண்டு இளைஞர்கள் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியதால், அவர்கள் ஆற்காடு நகர காவல் துறையினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
இந்த நிலையில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஜித்குமார், சூர்யா ஆகிய இருவர் மீதும் ஆற்காடு குற்றவியல் நீதிமன்றத்தில் மூலமாக வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்ற நீதிபதி அவர்கள் இரண்டு குற்றவாளிக்கும் எட்டு வழக்குகளில் தலா இரண்டு ஆண்டுகள் தண்டனை என தீர்ப்பினை வழங்கினார்.
பின்னர் போலீசாரால் இரண்டு இளைஞர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.