இறந்த பேராசியரை பேப்பர் திருத்த அழைத்த திருவள்ளுவர் பல்கலை! அமைச்சர் தொகுதியில் அலட்சியம்!

ஜி.கே.சேகரன்,
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் இறந்த பேராசிரியருக்கு 14 ஆம் தேதியான இன்று விடைத்தாள்களை திருத்த வருமாறு திருவள்ளூவர் பல்கலைக்கழகம் அழைப்பாணை அனுப்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர்மாவட்டம், சேர்க்காட்டில் தமிழக அரசின் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் உள்ளது. முறைகேடு புகார்களுக்கு ஆளாக்கப்பட்ட
இதன் கட்டுபாட்டில் ராணிப்பேட்டை,வேலூர் திருப்பத்தூர் திருவண்னாமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது.
இங்கு தற்போது விடைத்தாள்களை திருத்தும் பணியானது காட்பாடியில் உள்ள கல்வியியல் கல்லூரியில் நடக்கிறது.
இந்த விடைத்தாளை திருத்துவதற்காக ஊரீசு கல்லூரியின் வேதியியல் துறையை சேர்ந்த விஜயகுமார் என்ற பேராசிரியரை வருமாறு திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுபாட்டு அலுவலர் சந்திரன் அவர்கள் அழைப்பாணையை அனுப்பியுள்ளார்.
அது மட்டுமின்றி அவர் திருத்தக் கூடிய பேப்பர்களை எடுத்து மேஜை மீது தயாராக வைத்திருக்கிறார்கள்.
ஆனால் உண்மை என்னவெனில் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ள பேராசிரியர் விஜயகுமார் என்பவர் 2021 ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
இறந்து இரண்டு ஆண்டுகளான பேராசிரியரை திருவள்ளூவர் பல்கலைக்கழகம் விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு அழைத்திருப்பது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்பல்கலைக்கழகம் பணி மூப்பு பட்டியலை எவ்வாறு இவர்கள் பராமரித்து வருகின்றனர் என்பதற்கு இது ஒன்றே சாட்சியாக உள்ளது பல்கலைக்கழகம் தொடர்ந்து பல குளறுபடிகளில் சிக்கி வரும் நிலை இவ்வாறு இறந்தவருக்கு அழைப்பாணையை அனுப்பியுள்ளது வேடிக்கையாகவும் விந்தையாகவும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் பல்கலைகழகம் அமைந்துள்ள இடமானது காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குள் உள்ளது. தற்போது துரைமுருகன் தான் எம் .எல் .ஏ,. அவர் சீனியர் அமைச்சராகவும் உள்ளார். அவரது தொகுதிய்தில் உள்ள பல்கலைகழகம் கடந்த ஆட்சியிலிருந்ததை போலவே முறைகேடுகளில் இருந்து விடுபட மறுத்து செயல்படுவது கல்வியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.