ஷூ கம்பெனி காயலான்கடை வேன் கவிழ்ந்து விபத்து! தொழிலாளர் பலி!

ஷூ கம்பெனி காயலான்கடை வேன் கவிழ்ந்து விபத்து! தொழிலாளர் பலி!

  ஜி.கே.சேகரன்,

  ஆம்பூரில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையின் கயாலன்கடை வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். பத்து பேர் காயமுற்றனர்.

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, திம்மாம்பேட்டை, தும்பேரி, கோனாம்மேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆம்பூர் தோல் காலணி தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை சாய் சக்தி தியேட்டர் அருகே முதியவர் அய்யாவு மீது மோதியது.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/Q_BLfIcQtP4" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

  இதனால் வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. அதில் முதியவர் அய்யாவு  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  மேலும் வேனில் பயணித்த பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் காயமடைந்த நிலையில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இச்சம்பவம் குறித்து வேனை ஓட்டி வந்த ஓட்டுனர் அஜிஸ் என்பவரை கைது செய்து ஆம்பூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பு:- வேலூர், திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலை மற்றும் ஷூ கம்பெனி ஆகியவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களை அவர்கள் பகுதிக்கே சென்று அழைத்து வர, வேன் மற்றும் பேருந்துகள் குத்தகை எடுக்கப்படுகின்றன.

 அவ்வாறு எடுக்கப்படும் வாகனங்கள் பெரும்பாலானவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கணக்கில் வராதவை. அதாவது காயலாங்கடைக்கு போடக்கூடிய வாகனங்களை வைத்து ஆபத்தான சேவையை செய்து வருகிறார்கள்.

 வட்டார போக்குவரத்து அலுவலக அலுவலர்கள் கண்டு கொள்வார்களா?