ஆன் லைன் ரம்மி அரக்கனால் இளம் பெண் பலி!

ஆன் லைன் ரம்மி அரக்கனால் இளம் பெண் பலி!

  ஜி.சாந்தகுமார்,

  ஆன்லைன் ரம்மி விளையாடி வந்த இளம் பெண் தன்வசம் இருந்த பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

  இது பற்றின விவரம் வருமாறு,

  தமிழக தலைநகர் சென்னை, மணலி புது நகர், அவுசிங் போர்டை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர், அம்பத்தூரில் உள்ள பாங்க் பஜார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி பவானி (29), இவர், கந்தன் சாவடியில் உள்ள ஹெல்த் கேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு, மெக்காட்டிக் பேரஸ் (3), நோயல் கிறிஸ் (1) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.

  இந்நிலையில், பவானி  ஆன்லைன் ரம்மியை விளையாடி வந்துள்ளார். மனைவி பணத்தை வைத்து சூதாட்டம் ஆடி வந்ததை கண்டுபிடித்த கணவர் பாக்கியராஜ் கண்டித்துள்ளார். ஆனால், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், பவானி தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.

   ஆரம்பத்தில் , ரம்மி விளையாட்டில் பணம் சம்பாதித்த பவானிக்கு ஆசை அதிகமானது, அதன் விளைவு, முதல் கட்டமாக தன் 20 சவரன் நகையை அடமானம் வைத்து விளையாடி தோற்றார். இழந்த பணத்தை மீட்டெடுக்க, தனது தங்கை பாரதியிடம், கடனாக ஒன்றரை லட்சம் வாங்கினார். பின்னர், பெரியப்பாளையத்தில் வசிக்கும் மற்றொறு தங்கை கவிதாவிடம், ஒன்றரை லட்சம் வாங்கினார் அதை வைத்து ரம்மியாடியிருக்கிறார்.

 கடந்த ஒரு வருடமாக, நகை, பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த பவானி, தங்கைகளிடம் மிகவும் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்.

 அப்படியிருக்க நேற்று இரவு, தன் வீட்டின் குளியலறைக்கு சென்ற பவானி, தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

  இது போல பல குடும்பங்களை ஆன்லைன் ரம்மி பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. எனவே தமிழக அரசு உடனே ஆன்லைன் ரம்மியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கை.

குறிப்பு:- மன உலைச்சல், விரக்தியான எண்ணம் ஏற்படுமாயின் 'சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 அல்லது மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை உதவி எண்: 104 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.