அதிகாரிகளின் அலட்சியம்:-100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்க்கப்படும்!

அதிகாரிகளின் அலட்சியம்:-100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்க்கப்படும்!

க.முனிசாமி,

   அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதில் கால தாமதம் ஏற்படுகிறது.100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்பு அமைப்பின் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.

 இது பற்றின விவரம் வருமாறு,

 தர்மபுரியில் வெளிபேட்டை தெருவில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள   நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிலங்கள் மீட்பு அமைப்பின் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 அதன் பேரில் அங்கு சென்ற அவர் மேற்படி இடங்களை நேரில் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்ய மறுத்து வருகின்றனர். மேலும் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கழிவுகள் அதிகப்படியாக உள்ளது. அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 ஆயிரம் சதுர அடி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலங்களில் பெருமளவில் கடைகள் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் உள்ளது.

 கடந்த பத்து ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் சொத்துக்கள் மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் அதிகாரிகளின் அலட்சியத்தால் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

 அங்காளம்மன் கோவில் பழமை மாறாமல் புதுபிக்கும் பணி விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.